ஞானசார தேரர் தலைமையில் PTF குழு - ஜனாதிபதி...
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற தலைப்பில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி (Presidential Task Force) நியமிக்கப்பட்டு, வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற கருத்தின் அமுலாக்கம் குறித்து ஆராய்ந்து சட்ட வரைவை தயாரிக்கவே குறித்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணிக்குழு உறுப்பினர்கள் 2022 பிப்ரவரி 28 அல்லது அதற்கு முன் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.